http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Sunday, August 28, 2016

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.







அருள்மிகு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஒரு கடினமான மலைப்பயணத்தில் சென்று வந்த கோயில்
என்றால் அனேகமாக இந்தக்கோயிலாகத் தான் இருக்கும்.
தை மற்றும் ஆடி அமாவாசை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஸ்தலம் இது.
இதன் வரலாற்றை தெரிந்து கொள்வோமா?
மேற்கு தொடர்ச்சி மலை தென் பகுதியில் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சாப்டூர் மற்றும் தாணிப்பாறை மலைப்பகுதியில்
சிவகிரி,
விஷ்ணு கிரி,
பிரம்மகிரி,
சித்தகிரி
என்ற 4 மலைகளுக்கு நடுவில்
சஞ்சீவிகிரி
என்ற மலையில் சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
காலப்போக்கில் சஞ்சீவி கிரி மலை ‘சதுரகிரி மலை’ என மாறியது.
பஞ்ச பூசலிங்கத் தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சுந்தர முர்த்தி ஆரிடலிங்கம், சந்தன மகாலிங்கம் தைவிகலிங்கம் ஆக போற்றப்படுகிறார்.
அகத்தியர் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும், காயகற்ப மூலிகை வளமும் நிறைந்தது இத்தலம்.
இங்கு ஒரு முறை வந்து சென்றால் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திரதீர்த்தம், கவுண்டின்ய தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம் குளிராட்டி தீர்த்தம் ஆகியவற்றில் நீராடியவர்கள் பல பலன்களை பெறுவர்.
காவல் தெய்வங்களாக பைரவ முர்த்தி, காளியம்மை, பேச்சியம்மை, பிளாவடி கருப்பண சாமி உள்ளன.
கால பூஜைகளின் போதும் அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.
தை, ஆடி அமாவாசை தினத்திலும், நவராத்திரியன்றும் சுந்தரமகாலிங்கம் சுவாமியை வணங்குபவர்கள் வாழ்வில் சகலமும் பெற்று உயர்வான, செல்வாக்கான நிலையை அடைவர் என்பது ஐதீகம்.
இதனாலேயே முக்கிய அமாவாசை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்.
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
தாணிப்பாறை பகுதியில் வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறை சார்பில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சோதனையிட்ட பிறகே பக்தர்கள் சதுரகிரி கோயில் மலைப்பகுதிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஐகோர்ட் உத்தரவுப்படி பிளாஸ்டிக் பொருட்கள், சிகரெட், மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்களை கோயிலுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
கோயிலில் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு அங்குள்ள அன்னதான மடங்கள் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. வண்டிப் பண்ணை, மந்தித் தோப்பு பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
பக்தர்கள் கூடும் நாட்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
ஒரு முறை இக்கோயிலுக்கு வந்து சென்றால் சகல துன்பங்களும் நீங்கி வாழ்வு வண்ணமயமாகும் என்று கூறப்படுவதுண்டு.
இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் இறைவனை தரிசிக்க வாருங்கள் .
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.




*இமயமலையை_போல்சக்திவாய்ந்த_மலைசதுரகிரி*

நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

*நோய் தீர்க்கும் மலை:*
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.
இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

*திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது.*
மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்க
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும்.
பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.

* சுந்தரமகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது.
ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

*இருப்பிடம்:*
*மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம்.* *இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும்.* *அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.*

அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள்.
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.

அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

*திறக்கும் நேரம்:*
*காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.**போன்:* *98436 37301, 96268 32131*
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம்.
எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது.
உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும்.
24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள்.
சுடச்சுட சாதம் கிடைக்கும்.

*சதுரகிரி தல வரலாறு :*
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால்.
இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.
இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.
ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார்.
சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார்.
சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.
பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.
தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.
மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான்.
சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.
ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான்.
அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.
சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன்.
உன் பெயர் யாழ்வல்லதேவன்.
நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய்.
சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய்.
உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார்.
அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.
இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது.
இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது.
மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.

மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன.
இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.
சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.
அடுத்து வருவது காராம் பசுத்தடம்.
இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.
இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும்.
இது ஆபத்தான இடம்.
இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது.
இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது.
இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது.
கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும்.
ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.
சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது.
இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.

பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.

மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

*இரட்டை லிங்கம்:* ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது.
அவரது மனைவி ஆண்டாள்.
பெருமாள் பக்தை.
இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர்.
இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர்.
இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி.
சிவன் ஆண்டாளிடம் சென்றார்.
அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை.
பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள்.
அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார்.
இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

*பிலாவடி கருப்பு:* வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது.
ஆனால், பணம் போதவில்லை.
பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார்.
அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார்.
மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார்.
இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார்.
இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது.
இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர்.
இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

*பெரிய மகாலிங்கம்:* நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது.
இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர்.
பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது.
சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது.
சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

*தவசிப்பாறை:* மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.
இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது.
கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும்.
இது மிகவும் சிரமமான பயணம்.
பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது.
குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது.
உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது.
இதனுள் ஒரு லிங்கம் உள்ளது.
மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.
இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது.
குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன.
இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள்.

இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.

தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது.
பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும்.
இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.
அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார்.

அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார்.
அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.
சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின்றனர்.
அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார்.
இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது.
அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர்.

சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது.
இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை.
அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

*பார்வதி பூஜித்த லிங்கம் :*
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார்.
எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள்.
தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.
மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள்.
இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்
இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.
பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.

மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான்.
18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது.
செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர்.
இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது.
நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும்.
விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.
இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம்.
இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும்.
வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு.
இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது.
அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.
இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது.
இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன.
இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

*அபூர்வ மூலிகைகள் :*
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது .
முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு.
மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். ஊபார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும்.
இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும்.
அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும்.
விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும்.
விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.
இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு.
அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும்.
அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு.
இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும்.
நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது.
மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது.
இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.
நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார்.

"மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார்.
அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது.
எதுவும் கோவில் கூட இல்லை.
ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை.
வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர்.
கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன.
வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
இவை அத்தனையும் சர்வ நிஜம்.
இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள்.

நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும்.
இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா
சாதாரண மலைகளைப் போலல்ல இது.
வீரியம் நிறைந்த வினோதமான மலை.
கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது.

இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது.
இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்...



🌺 *ஓம் நமசிவாய* 🌺 “

Thursday, August 25, 2016

கோபாலா கோவிந்தா கிருஷ்ணா முராரி...




குழந்தைகள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்!


கிருஷ்ண ஜெயந்தி விரதம்!

கிருஷ்ண ஜெயந்தி
ஆண்டுதோறும்
கிருஷ்ணரின்பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும்.


ஆவணிமாதத்தில்
தேய்பிறையின்
எட்டாம்நிலையில்
(அஷ்டமி) ரோகிணி
நட்சத்திரம் சேர்ந்த
நாளில் இவ்விழா
நிகழ்கிறது.

நமதுபண்டிகைகளில்
கிருஷ்ணஜெயந்திக்கு
என்றுமே தனி இடம் உண்டு.

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம்
தலைதூக்குகிறதோ,
அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

அந்த வகையில்
அதர்மத்தை அழிக்க பகவான்
கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து
பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக்கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி
அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு
கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய்விளக்கு ஏற்ற
வேண்டும்.

குழந்தைகளை கண்ணனாகவும்,ராதையாகவும் அலங்கரிக்கவேண்டும்.

தேங்காய், பழம்,
வெற்றிலை பாக்கு
போன்ற பூஜை பொருட்களுடன்
கண்ணனுக்கு பிடித்தமான சீடை,
முறுக்கு, தட்டை,லட்டு,
அதிரசம், முந்திரி,
பாதாம்,பிஸ்தா,
குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல்,
இனிப்பு பூரி,
மோர் குழம்பு, ரவா லட்டு,தேன்குழல், சர்க்கரை
கலந்தவெண்ணை,
பாசிப் பருப்பு பாயாசம் போன்ற
பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.

நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும்.

நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.

தஹிகலா என்றால் என்ன தெரியுமா?

பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலப்பது என்பர்.

வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான்.

இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான்.

அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.

தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.

அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள்.

பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது.

இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.


https://www.facebook.com/narayanan.viji.3/videos/1770768389845018/?autoplay_reason=gatekeeper&video_container_type=1&video_creator_product_type=2&app_id=350685531728















































கிருஷ்ணனின் 64 பண்புகள் தெரியுமா?

கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இவை தனி மனித சுதந்திரம். தனி மனித விருப்பம். பாரம்பரியமிக்க நம் நாட்டில் நம் முன்னோர் வகுத்த, வழி முறைகளின்படி கொண்டாடப்படும், போற்றப்படும்ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்திபண்டிகை நாளில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி மேலும் அறிவோமாக.
கி.மு. 2228-ல் மதுராவில் தேவகி, வாசுதேவன் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மனித சமுதாயத்தினை மேம்படுத்தவும், ஆன்மீகம் தழைக்கவும் வேண்டி பிறந்த இக்குழந்தையே ஸ்ரீகிருஷ்ண பகவான்.
தெய்வீக அவதாரமான இவரை இன்றும் கோடானு கோடி மக்கள், வழிபட்டும், பெயரினை ஜபம் செய்தும், தவம் செய்தும் வருகின்றனர். ஸ்ரீகிருஷ்ண புராணம் படிக்கவும், கேட்கவும் திகட்டாத இனிமை.
ஒரு குழந்தையாக, போர் வீரராக, மாடுகள் மேய்ப்பவராக, தேரோட்டியாக, குருவாக உலகம் போற்றும் கீதையினை போதித்தவராக பல ஸ்தானங்களில் 125 வருடம் வாழ்ந்தவர். அனைவரின் மனதினையும் கவர்ந்தவர். அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலை நாட்டியவர்.
அவர் வாழ்வில் அவர் சந்திக்காத கடின சூழ்நிலைகளே இல்லை. ஆனால் அவர் ஒரு முறை கூட சோகப்படவில்லை. மலர்ந்த, சிரித்த முகம் மாறியதே இல்லை. அருளின் மொத்த உருவ அமைப்பு அவர்.
பிறப்பு கி.மு. 2228 (ஜூலை 19/20) கிருஷ்ண பட்சம், அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில் நடு நிசியில் பிறந்தவர். வாசு தேவரால் கோகுலத்தில் நந்தபாலன், யசோதையிடம் சேர்க்கப்பட்டவர். காரக முனிவரால் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டப்பட்டார்.
மூன்று வயதிற்குள்ளாக புட்டனா சகதசூரா, த்ரினிவத்ரா என்ற அரக்கர்களை அழித்தவர்.
3-6 வயதில் பிருந்தாவனில் பகாசுரா, அக்ரசுரா, தேனுகா என்ற அரக்கர்களை அழித்தவர்.
7-10 வயதிற்குள் கோவர்த்தன மலையை தூக்குதல், மதுராவில் மல்யுத்தம், கம்சனை அழித்தல் என்ற சாகசங்களையும் புரிந்தவர்.
10-28 வயதில் மதுராவை ஆண்டவர். கார்கமுனியால் காயத்ரிஜபம் ஏற்றல், 64 கலை கற்றவர், அரக்கர்களிடமிருந்து மதுராவினை காத்தவர்.
29-83 வயதில் துவாரகையை நிறுவியவர்.
84-125 வயதில் அர்ஜுனின் கீதோபதேசம், விஸ்வரூப தரிசனம் பிரிகிர் மகாராஜாவை கருப்பையில் காப்பாற்றியவர்.
கிருஷ்ணரை நாம் ஏன் கடவுள் என்று கூறி வழிபடுகின்றோம்?
கிருஷ்ணர் இதுவரை ஒன்பது அவதாரங்கள் எடுத்துள்ளார். விஞ்ஞான ரீதியாக 5000 வருடங்களுக்கு முன்னால் இப்பூமியில் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான நிரூபணங்கள் உள்ளன.
அவர் ஆட்சி செய்த துவாரகா நகரம் குஜராத் கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.ஒரு 7 வயது சிறுவனாக மிகப்பெரிய கோவர்த்தன மலையினை தன் கையால் தூக்கி மக்களை காத்தவர்.
அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் பொழுது தனது விஸ்வ ரூப தரிசன காட்சி அளித்தவர். தாய் யசோதைக்கு தன் வாயைத் திறப்பதின் மூலம் பிரபஞ்சத்தினை காட்டியவர்.
இன்றும் பகவத் கீதை உலகில் எவரும் எக்காலத்திலும் கடைபிடிக்க வேண்டிய புனித சாரமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்காலத்தினையும் உணர்ந்தவர்.
பிரம்ம சம்ஹிதாவில் இறைவன் பிரம்மா
கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணனே கடவுள். நிரந்தர ஒளிவிடும் ஆன்மீக உடல் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார். கீத மஹாத்மியத்தில் இறைவன் சிவன் கூட ஒரே ஒரு கடவுள் கிருஷ்ணா, தேவகியின் புதல்வர் என குறிப்பிட்டுள்ளார்.
மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீகிருஷ்ண அவதாரமே அதிகம் எழுதப்பட்டுள்ளது. பேசப்படுகின்றது. வழிபடப்படுகின்றது. எனவேதான் கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களின் மாபெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண பகவானின் பண்புகளாக 64 பண்புகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த பண்புகளே இவரை கடவுளாக நம்மை வழிபடச் செய்கின்றது. அவற்றையும் காண்போம்.




* ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடன் பார்ப்பவரின் கண்களை தானாக ஈர்க்கும் பரவசம் அளிக்கும் தோற்றம்.
* அனைத்து சுப, மங்கல பண்புகள் பெற்றவர்.
* சிவந்த கண்கள், பாதங்கள், அண்ணம், உதடுகள், நகங்கள்.
* பரந்த-நெற்றி, குறுகிய-கழுத்து ஆழ்ந்த-குரல், நீண்ட- மூக்கு, கைகள், கால்கள் போன்ற பண்புகளைப் பெற்றவர்.
* ஸ்ரீகிருஷ்ணரை பார்த்த உடனேயே பார்ப்பவர் மனமகிழ்ச்சி பெறுவர்.
* அவரது தோற்றம் சுடரொளி கொண்டது. நீல வண்ணமானவர்.
* வலுவானவர். எத்தனையோ அரக்கர்களையும், அசுரர்களையும் அழித்தவர். கோவர்த்தன மலையைத் தூக்கியவர்.
* எப்பொழுதும் இளமையாய் காணப்படுபவர்.
* பல மொழிகள் அறிந்தவர், விலங்குகள், பறவைகள் சம்பாஷனை கூட புரிந்தவர்.
* உண்மையானவர்.
* இனிமையாக பேசுபவர்.
* அர்த்தமுள்ள சொற்களை சரளமாக பேசுபவர், நல்ல நடத்தை கொண்டவர்.
* மிகவும் கற்றவர். தார்மீகக் கொள்கைகளை செயல்படுத்துபவர்.
* அதீத புத்திசாலி தனமும், கூர்மையான நினைவும் கொண்டவர்.
* ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மேதை.
* கலை நயம் கொண்டவர்.
* மிக அதிக புத்தி கூர்மை உடையவர். பல்வேறு வேலைகளை தனி ஒருவராய் ஒரே நேரத்தில் செய்பவர்.
* சிறந்த நிபுணர். கடினமான பணியினை விரைவில் செய்யும் திறன் கொண்டவர்.
* கடமைப்பட்டவர். அவர் ஒருவரது சிறிய உதவியினையும் மறவாதவர்.
* மிக உறுதியான கொள்கைகள் உடையவர்.
* காலம், சூழ்நிலை அறிந்த நிபுணத்துவம் கொண்டவர்.
* வேதங்களின் சாரமானவர்.
* புனிதமானவர்.
* மிக அதிக சுய கட்டுப்பாடு உடையவர்.
* வேகம் கொண்டவர். மன உறுதி கொண்டவர். நினைத்த இலக்கை அடையும் வரை தொடர்ந்து வேலை செய்பவர்.
* எவரும் தாங்க முடியாது என நினைக்கும் பிரச்சனைகளைக் கூட பொறுக்கும் குணம் படைத்தவர்.
* மன்னிக்கும் குணம் கொண்டவர்.
* அவரது மனம், திட்டம், நடவடிக்கை, செயல்பாடு இவற்றினை புரிந்து கொள்வது மிகக் கடினம்.
* அமைதியானவர். எந்த கொந்தளிப்பும் இல்லாதவர்.
* உலகின் அனைத்துப் பிரிவினரும் அவருக்கு சமமே.
* பரந்த மனப்பான்மை கொண்டவர்.
* மத ஒழுக்கம் கொண்டவர்.
* மாவீரர். எதிரிகளை கதிகலங்கச் செய்பவர்.
* கருணை கொண்டவர். மற்றவர் துயர் துடைப்பவர்.
* மரியாதை தெரிந்தவர். ஆன்மீக குரு. அந்தணர். ஒரு சாதாரண நபர் அனைவரையும் மரியாதையோடு நடத்துபவர்
* மென்மையானவர். சுதந்திரமானவர்.
* எளிமையானவர்.
* பணிவு கொண்டவர்.
* தன்னை சரணடைந்த ஆத்மாக்களை காப்பவர்.
* எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பவர்.
* தன் பக்தர்களுக்கும், அனைவருக்கும் நல்லதையே நினைப்பவர்.
* அன்புக்குக் கட்டுப்பட்டவர்.
* எப்போதும், எல்லோருக்கும் சுபமானவர்.
* மிகவும் சக்தி வாய்ந்தவர்.
* மிகவும் புகழ் பெற்றவர்.
* மிகவும் பிரபலமானவர். அனைவருக்கும் பிரியமானவர்.
* பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வருபவர்
* சிறப்பு தகுதிகள், உயர் சக்திகள் உள்ள தெய்வங்களை கண்டு பெண்கள் ஆராதிப்பர். அவ்வகையில் பெண்களால் போற்றப்படுபவர்.
* அனைவராலும் வணங்கப்படுபவர்.
* புகழ், செல்வம், அழகு, அறிவு என்ற செழுமைகள் நிறைந்தவர்.
* இவரே சிறந்தவர்.
* பிரபஞ்சங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்ட உயர்சக்தியானவர்.
* எப்போதும் மாறாதவர்.
* எல்லா நேரங்களிலும், அனைத்து இடங்களிலும் நடப்பவைகளை அறியும் தன்மை படைத்தவர்.
* எப்பொழுதும் புதிதாய், புத்துணர்வாய் இருப்பவர்.
* அழியா பொன்னுடல் கொண்டவர்.
* ஆன்மீக அதிசய ஆளுமை பெற்றவர்.
* அபரிமிதமான வல்லமை பெற்றவர்.
* தன்னிடமிருந்து கணக்கிலடங்கா பிரபஞ்சங்களைத் தோற்றுவிப்பவர்.
* பல அவதாரப் பிறப்புகளின் மூலம் இவரே.
* இவர் அழிக்கும் எதிரிகள் கூட இவரால் இரட்சிக்கப் படுகிறார்கள்.
* உடலிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் இவரிடம் கவரப்படுகின்றன.
* அற்புதமான நடவடிக்கைகள் கொண்ட வாழ்க்கையும், குறிப்பாக வியக்கும் குழந்தை பருவமும் கொண்டவர்.
* எப்பொழுதும் பக்தர்களால் சூழப்பட்டவர்.
* தனது புல்லாங்குழல் இசையால் அனைத்து ஜீவன்களையும் கவர்ந்திருப்பவர்.
* இவரது பிரம்மாண்ட அழகு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.